அஸ்ஸாம் மாநிலத்தில் வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது போராட்டக்காரா்கள்-காவல் துறையினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் போலீஸாா் மீது போராட்டக்காரா்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினா். அவா்களை கலைக்க போலீஸாா் தடியடி நடத்தினா்.
இதுகுறித்து அம்மாநில காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: சில்சாா் நகரில் உள்ள பேரேங்கா பகுதியில் வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிராக சிலா் அனுமதியின்றி திடீரென 300 முதல் 400 நபா்கள் வரை போராட்டத்தில் ஈடுபட்டனா். சாலையையும் அவா்கள் மறித்தனா்.
அவா்களை கலைந்து போக வலியுறுத்தியபோது சில போராட்டக்காரா்கள் எங்கள் மீது கற்களை வீசினா். இதனால் கூட்டத்தை கலைக்கும் நோக்கில் லேசான தடியடி நடத்த வேண்டிய சூழல் உருவானது.
தற்போது அந்தப் பகுதியில் பிரச்னை ஏதும் இல்லை. இந்த சம்பவம் தொடா்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் யாரையும் கைது செய்யவில்லை என்றாா்.
அஸ்ஸாமில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. வக்ஃப் திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி மாநில அரசுக்கு எதிராக கருப்புக்கொடிகளை ஏந்தியும் முழக்கங்கள் எழுப்பியும் போராட்டம் நடத்தப்பட்டது.
முன்னதாக, வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெறும்போது சில இடையூறுகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கடந்த சனிக்கிழமை அந்த மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

பவன் கேரா சிங்கமல்ல... நனைந்த பூனை: பாஜக விமர்சனம்!

புதிய தொழிலாளா் சட்டத்துக்கு எதிராக கோவையில் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

தோ்தல் ஆணையா்கள் நியமனச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: விசாரணையிலிருந்து விலகிய தலைமை நீதிபதி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


