கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சத்தீஸ்கரின் மாவோயிஸ்டுகள் 2 பேர் ஜார்க்கண்டில் சரண்!

சத்தீஸ்கரின் மாவோயிஸ்டுகள் 2 பேர் ஜார்க்கண்டில் சரணடைந்துள்ளதைப் பற்றி...

News image

சத்தீஸ்கரின் மாவோயிஸ்டுகள் 2 பேர் ஜார்க்கண்டில் சரணடைந்துள்ளனர்.

Updated On :15 ஏப்ரல் 2025, 1:24 pm

DIN

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மாவோயிஸ்டுகள் 2 பேர் ஜார்க்கண்ட் காவல் துறையினரிடம் சரணடைந்துள்ளனர்.

சத்தீஸ்கரின் பல்ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமர்ஜேத் பிர்ஜியா மற்றும் மிதிலேஷ் கொர்பா ஆகிய இரண்டு பேரும், லத்தேஹார் பகுதியில் சோட்டு கார்வார் எனும் மாவோயிஸ்டு தலைவரின் கீழ் செயல்பட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் இருவரும் ஜார்க்கண்டின் லத்தேஹர் மாவட்டத்தின் காவல் துறை உயர் அதிகாரியான குமார் கவுரவ் மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை அதிகாரி யாதாராம் பன்கர் ஆகியோரின் முன்னிலையில் இன்று (ஏப்.15) சரண்டைந்துள்ளனர். மேலும், சரண்டைந்த முன்னாள் கிளர்ச்சியாளர்கள் இருவருக்கும் மலர் மாலை அணிவித்து அதிகாரிகள் வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் செயல்பட்டு வரும் மாவோயிஸ்டுகள், பாதுகாப்புப் படையினரிடம் சரணடைய வேண்டும் என்றும் இல்லையென்றால் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு ஆளாகக்கூடும் என எச்சரித்துள்ளனர்.

முன்னதாக, தற்போது சரண்டைந்துள்ள இருவரின் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த சில மாதங்களாக மாவோயிஸ்டுகளுக்கு எதிராக அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளினால் அவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கக் கூடும் எனக் கூறப்பட்டுகிறது.

கடந்த சில நாள்களாக சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளினால் 50-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.