சண்டிகர்: ஹரியாணாவில் விவசாயிகளிடமிருந்து முழுவதும் மொத்தம் 31.52 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கிய கொள்முதல் இன்று வரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளிடமிருந்து கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான தொகை ரூ.1,400 கோடி நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி வரையில் 18.24 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது. அதே வேளையில் 2025-26ல் ரபி சந்தைப்படுத்தல் பருவத்தில் அதாவது மார்ச் 15 முதல் மாநிலத்தில் கடுகு கொள்முதல் தொடங்கப்பட்டுள்ளது.
கடுகு கொள்முதல் செய்யும் பணியை மாநிலத்தில் உள்ள எச்ஏஎஃப்இடி (HAFED) மற்றும் ஹரியானா கிடங்கு கழகம் ஆகியவை செய்து வருகின்ற நிலையில் இந்த ஆண்டு இன்று வரை 4.93 லட்சம் மெட்ரிக் டன் கடுகு முகவர்களால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மாநில அரசு சுமார் 1.71 லட்சம் விவசாயிகளிடமிருந்து கடுகு கொள்முதல் செய்துள்ளதாகவும், இதற்காக ரூ.1,843 கோடி அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

50 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறை: சம்பா பருவத்தில் 6.21 லட்சம் டன் நெல் கொள்முதல்
கோதுமை இட்லி

தென்னை விவசாயிகளிடமிருந்து கொப்பரையை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு

வடிகால்களில் 14 லட்சம் மெட்ரிக் டன் வண்டல் படிவுகள் அகற்றம்: அமைச்சா் தகவல்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


