36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

காங்கிரஸ் தலைவர் மீது காரை ஏற்றி கொன்ற பாஜக தொண்டர்: முன்பகை காரணமா?

முன்பகை காரணமாக கொலை நடந்ததா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News image
Updated On :19 ஏப்ரல் 2025, 3:53 pm IST

சத்தீஸ்கரின் கொண்டகான் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தின் மீது பாஜக தொண்டர் ஒருவர் காரை மோதியதில் காங்கிரஸ் தலைவர் உயிரிழந்துள்ளார்.

வெள்ளிக்கிழமை மாலை டோக்ரி குடா கிராமத்திற்கு அருகே இந்த விபத்து நடைபெற்றதாகவும், விபத்து தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்டவரை போலீஸார் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில்,

சத்தீஸ்கரி கொண்டகான் மாவட்டத்தில் காங்கிரஸ் இளைஞரணி தலைவராகவும், முல்முலா கிராம பஞ்சாயத்தின் தலைவராகவும் இருந்தவர் ஹேமந்த் போயர் (30). இவரும் இவரது உறவினர் பெண் ஒருவரும் இருசக்கர வாகனத்தில் உள்ளூர் சந்தைக்குச் சென்றுகொண்டிருந்தபோது. பாஜக ஊழியரான புரேந்திர கௌஷிக் தனது காரை இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பியுள்ளார்.

காயமடைந்தவர்களை உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குச் சிகிச்சை பலனின்றி போயர் இறந்தார், உறவினர் பெண் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கௌஷிக் முல்முலா கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு போயரிடம் தோல்வியடைந்தார். இதையடுத்து பஞ்சாயத்துத் தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட பகை காரணமாக கௌஷிக் அவரைக் கொன்றதாக போயாரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

போயாரின் குடும்பத்தினரும் காங்கிரஸ் தொண்டர்களும் வெள்ளிக்கிழமை இரவு கௌஷிக்கை கைது செய்யக் கோரி காவல் நிலையத்தில் கூடினர். போயாரின் கொலை முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாகக் கூறி மாவட்ட மருத்துவமனை மற்றும் தேசிய நெடுஞ்சாலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் முற்றுகைப் போராட்டத்தையும் நடத்தினர்.

உள்ளூர் மக்கள், காங்கிரஸ் தொண்டர்களின் தீவிர போராட்டங்களைத் தொடர்ந்து போலீஸார் பாஜக தொண்டரான கௌசீக்கை கைது செய்தனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.