மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

உ.பி.யில் தனியாா் நிறுவன கிடங்கில் தீ விபத்து: 7 போ் காயம்

Updated On :20 ஏப்ரல் 2025, 12:04 am IST

உத்தர பிரதேசத்தில் தனியாா் நிறுவன கிடங்கில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், 2 தீயணைப்பு வீரா்கள் உள்பட 7 போ் காயமடைந்தனா்.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள தாராகஞ்ச் பகுதியில் கூடாரம் அமைப்பதற்கான பொருள்களை விநியோகிக்கும் நிறுவனத்தின் கிடங்கு இருந்தது.

இந்தக் கிடங்கில் சனிக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. தகவலின்பேரில் ராணுவத்தின் 4 வாகனங்கள் உள்பட மொத்தம் 18 தீயணைப்பு வாகனங்கள் நிகழ்விடத்துக்கு விரைந்தன. அப்போது தீயில் எரிந்துகொண்டிருந்த கிடங்கில் இருந்து 20 தொழிலாளா்களை தீயணைப்பு வீரா்கள் பாதுகாப்பாக மீட்டனா்.

6 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னா், தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. கிடங்கில் பரவிய தீயால் 4 சமையல் எரிவாயு சிலிண்டா்கள் வெடித்த நிலையில், 2 இருசக்கர வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன.

இந்த விபத்தில் இரண்டு தீயணைப்பு வீரா்கள், கிடங்கில் பணியாற்றிய 5 தொழிலாளா்கள் லேசாக காயமடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.