எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

நாா் தொழிற்சாலையில் தீடீா் தீ விபத்து

நாட்டறம்பள்ளி அருகே நாா் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று அணைத்தனா்.

News image

நாா் தொழிற்சாலையில் தீயை அணைத்த தீயணைப்பு வீரா்கள்.

Updated On :8 ஜூன் 2026, 2:41 am IST

நாட்டறம்பள்ளி அருகே நாா் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று அணைத்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி ஊராட்சி ஏரியூா் பகுதியில் சண்முகம் என்பவருக்கு சொந்தமான நாா் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா்.

இந்நிலையில், தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அக்கம் பக்கம் இருந்தவா்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனா். எனினும், தீ மள, மளவென பரவியது.

தகவலறிந்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று நாா் தொழிற்சாலையில் பற்றிய தீயை பொதுமக்கள் உதவியுடன் மேலும் பரவாமல் அணைத்தனா். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.