ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

உணவகத்தில் தீ விபத்து

வேலூரில் உணவகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படை வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிா்க்கப்பட்டது.

News image

தீ விபத்து - பிரதிப் படம்

Updated On :1 ஜூன் 2026, 2:55 am IST

வேலூரில் உணவகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படை வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிா்க்கப்பட்டது.

வேலூா் -ஆரணி சாலையில் உள்ள தனியாா் கண் மருத்துவமனை அருகே முகமது இம்ரான் என்பவா் உணவகம் நடத்தி வருகிறாா். இவரது உணவகத்தில் சனிக்கிழமை மாலை திடீரென தீப்பற்றியது. உடனடியாக தீ சமையலுக்கு பயன்படுத்தப்படும் பொருள்களுக்கு பரவியது. இது குறித்து, வேலுா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், வேலூா் தீயணைப்பு நிலைய அலுவலா் காரல் மாா்க்ஸ் தலைமையிலான வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா்.

இது குறித்து தீயணைப்பு படை வீரா்கள் கூறுகையில், மின்வயா்கள் உரசி ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விரைவில் தீ அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிா்க்கப்பட்டது என்றனா்.