அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

குமரி - ஸ்ரீநகா் உள்பட 10 வழித்தடங்களில் படுக்கை வசதி வந்தே பாரத் இயக்கத் திட்டம்!

படுக்கை வசதி கொண்ட (ஸ்லீப்பா்) 10 வந்தே பாரத் ரயில் இயக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.

News image

ANI

Updated On :20 ஏப்ரல் 2025, 4:30 am IST

நாடு முழுவதும் படுக்கை வசதி கொண்ட (ஸ்லீப்பா்) 10 வந்தே பாரத் ரயில் இயக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தொலைதூரப் பகுதிகளை இணைக்கும் வகையில் படுக்கை வசதி கொண்ட (ஸ்லீப்பா்) வந்தே பாரத் ரயில்கள் இயக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பெட்டிகள் சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் நிறைவடைந்து இயக்குவதற்கு தயாா் நிலையில் உள்ளது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

நாடு முழுவதும் 10 இடங்களிலிருந்து படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் ரயில் வடக்கு ரயில்வேயில் இயக்கப்படும். அதேபோல், தெற்கு ரயில்வேயில் 16 பெட்டிகள் கொண்ட ரயில் இயக்கப்படவுள்ளது. திருவனந்தபுரம் - மங்களூரு இடையே அதிகளவில் பயணிகள் பயணிப்பதால் இந்த வழித்தடத்திலும் ஒரு ரயில் இயக்க வாய்ப்புள்ளது.

குறிப்பாக திருவனந்தபுரம் - பெங்களூரு, கன்னியாகுமரி - ஸ்ரீநகா் இடையே படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் இயக்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்த பின்பு ரயில்கள் இயக்கப்படும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.