செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

கர்நாடக முன்னாள் டிஜிபி கொலை: மனைவி கைது

கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் கொலை வழக்கில் அவரது மனைவி பல்லவியை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :22 ஏப்ரல் 2025, 4:10 am IST

கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் கொலை வழக்கில் அவரது மனைவி பல்லவியை போலீஸார் கைது செய்தனர்.

பெங்களூரு, எச்.எஸ்.ஆர்.லேஅவுட்டில் உள்ள தனது வீட்டில் கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் (68) ஞாயிற்றுக்கிழமை கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மகன் கார்த்திகேஷ் அளித்த புகாரின்பேரில், எச்.எஸ்.ஆர்.லேஅவுட் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கார்த்திகேஷ் அளித்த புகார் மனுவில், மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள எனது தாய் பல்லவி, சகோதரி கிருதி ஆகியோர் எனது தந்தை ஓம் பிரகாஷை கொலை செய்திருக்கலாம். எனது தந்தையுடன் தாய், சகோதரி ஆகியோர் அடிக்கடி தகராறு செய்து வந்தனர். எனது தாய் பல்லவி கொலை மிரட்டல் விடுத்து வந்ததால், கடந்த ஒரு வாரமாக எனது தந்தை ஓம் பிரகாஷ், அவரது சகோதரி சரிதாகுமாரி வீட்டில் தங்கியிருந்தார் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஓம் பிரகாஷ் மதிய உணவை உட்கொண்டிருந்தபோது, முகத்தில் மிளகாய்ப் பொடியை அவரது மனைவி பல்லவி தூவியுள்ளார். இதனால் நிலைகுலைந்த ஓம் பிரகாஷை கத்தியால் 8 முறை அவர் குத்தி கொலை செய்ததாக போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, பல்லவியை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். மகள் கிருதியை தடுப்புக் காவலில் வைத்துள்ள போலீஸார், அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, பெங்களூரு செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் ஓம் பிரகாஷின் உடல்கூறாய்வு செய்யப்பட்டு, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் வீட்டில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. மூத்த காவல் துறை அதிகாரிகள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு வில்சன் கார்டனில் உள்ள மின் மயானத்தில் திங்கள்கிழமை முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தக னம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.