ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத் தளபதி உள்ளிட்ட அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் இதுதொடர்பாக விளக்கமளிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு-காஷ்மீரின் சுற்றுலா நகரமான பெஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் கூடியிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று(செவ்வாய்க்கிழமை) பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த கொடூரத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர்கள் உள்பட 28 பேர் கொல்லப்பட்டனர். மேலும் காயமடைந்த பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு - காஷ்மீர் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துப் பேசி வரும் நிலையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை இந்த சம்பவம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அரசுமுறை பயணமாக செளதி சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, பயணத்தை பாதியில் முடித்துவிட்டு இன்று காலை தில்லி திரும்பி்யது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவத் தளபதி உபேந்திர திவேதி உள்பட அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது பெஹல்காம் தாக்குதலில் என்ன நடந்தது? தாக்குதலின் தற்போதைய நிலவரம் பற்றி எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு விளக்கமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஒரு மூத்த அமைச்சர் நியமிக்கப்படலாம் என்றும் இந்த விவகாரம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது குறித்தும் அரசு பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தில்லி திரும்பியதும் இதுதொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சர்வதேச பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான்: ராஜ்நாத் சிங்

எல்லை தாண்டிய பயங்கரவாதம்: இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை: ராஜ்நாத் சிங்

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

மேற்கு வங்கத்தை பாகிஸ்தான் குறிவைத்தால்... ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

