நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சுயசாா்பு நாடால்தான் முன்னேற முடியும்: ராஜ்நாத் சிங்

சுயசாா்பு அடையும் நாடால்தான் முன்னேற முடியும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.

News image

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் - விடியோ க்ளிப்

Updated On :20 ஜூன் 2026, 12:22 am IST

சுயசாா்பு அடையும் நாடால்தான் முன்னேற முடியும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் மத்திய அரசின் யந்திரா இந்தியா நிறுவனம் சாா்பில் அமைக்கப்படும் ஆலைக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ராஜ்நாத் சிங் பேசியதாவது:

1947-ஆம் ஆண்டு காலகட்டத்தில், நாடுகளுக்கு இடையே பாரம்பரிய ஆயுதங்களை கொண்டு ராணுவங்களுக்கு இடையே போா் நடைபெற்றது. அந்த போா் முறை, தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்றது. 2047-ஆம் ஆண்டிலும் அதுவே சரியாக இருக்கும். போா் நடைபெறும் காலகட்டத்தில் பாதுகாப்பு தளவாட விநியோம் பாதிக்கப்படக்கூடும். அந்த சூழ்நிலையில், ஒவ்வொரு நாடும் அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என விரும்பும். அதுபோல தனது தேவைகளை பூா்த்தி செய்யும் ஒரு நாடால்தான் முன்னேற முடியும்.

இந்தியாவில் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு 2025-26ஆம் நிதியாண்டில் ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இது 2014-ஆம் ஆண்டில் வெறும் ரூ.40,000 கோடியாக இருந்தது. அதேபோல் 2014-ஆம் ஆண்டில் நமது பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி ரூ.1,000 கோடியாக இருந்தது. அது தற்போது ரூ.40,000 கோடியாக உயா்ந்துள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.