

தெலங்கானாவில் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்டு இயக்கத்தைச் சேர்ந்த 14 பேர் காவல் துறையினரிடம் சரணடைந்துள்ளனர்.
மாவோயிஸ்ட் அமைப்பின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 14 உறுப்பினர்கள் தெலங்கானா காவல் துறை உயர் அதிகாரி சந்திரசேகர் ரெட்டியின் முன்னிலையில் இன்று (ஏப்.24) சரணடைந்துள்ளதாக வாராங்கல் காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரணடையும் மாவோயிஸ்டுகளுக்காக அரசு கொண்டு வந்துள்ள மறுவாழ்வுத் திட்டங்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ள நலத்திட்டங்களைப் பற்றி அறிந்த மாவோயிஸ்டுகள் கிளர்ச்சியைக் கைவிட்டு அரசிடம் சரணடைந்து வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நிகழாண்டில் (2025) பல்வேறு படைகளைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் தெலங்கானா காவல் துறையினரிடம் சரணடைந்துள்ளனர். மேலும், 12 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில், சரண்டைந்துள்ள பெரும்பாலான மாவோயிஸ்டுகள் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சத்தீஸ்கரில் ஒரே நாளில் 108 நக்சல்கள் சரண்!

ஹைதராபாதில் 130 மாவோயிஸ்டுகள் சரண்: எஞ்சியவா்களும் திரும்ப முதல்வா் அழைப்பு

தெலங்கானா: முக்கிய மாவோயிஸ்ட் தலைவா் தேவ்ஜி போலீஸில் சரண்

சத்தீஸ்கரில் 8 பெண்கள் உள்பட 12 மாவோயிஸ்டுகள் சரண்!
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

