அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

இந்தியாவுடன் போர்? சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்திய பாகிஸ்தான்!

சிம்லா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் நிறுத்தி வைத்தது.

News image

PTI

Updated On :24 ஏப்ரல் 2025, 5:22 pm IST

சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்த நிலையில், பதில் நடவடிக்கையாக சிம்லா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது.

சிம்லா நதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்த பாகிஸ்தான், இதனைப் போராகக் கருதுவதாகத் தெரிவித்துள்ளது.

1971 ஆம் ஆண்டில் ஏற்பட்ட போரை நிறுத்தும்வகையில், 1972-ல் சிம்லா ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

சிம்லா ஒப்பந்தத்தின்படி, முக்கிய அம்சங்களாக, இருநாடுகளும் தங்கள் நாட்டுப் போர்க்கைதிகளை அமைதியான முறையில் விடுவிக்க வேண்டும். இரு நாடுகளின் எல்லைகளை அமைதியான முறையில், பேச்சுவார்த்தை மூலம் தீர்மானிக்க வேண்டும்; எல்லைப் பிரச்னைகளையும் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்.

பெஹல்காம் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசாக்களை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. தொடர்ந்து, இந்தியாவிலுள்ள பாகிஸ்தானைச் சேர்ந்த பாதுகாப்பு, ராணுவம், விமானம், கடற்படை ஆலோசகர்கள் ஒருவாரத்துக்குள் வெளியேற உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, இந்தியா மீது பாகிஸ்தானும் சில நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் வான்வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்தத் தடை, இந்தியாவுடன் அனைத்து வகை வர்த்தங்களும் நிறுத்தம் முதலான நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.