ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பஹல்காம் தாக்குதல்: அவதூறு கருத்து கூறிய 16 பேர் கைது!

நேற்று 14 பேர் கைதான நிலையில், 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News image

கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2025, 9:14 pm IST

பஹல்காம் தாக்குதல் குறித்து அவதூறு கருத்துக் கூறிய 16 பேரை அஸ்ஸாம் காவல் துறையினர் இன்று (ஏப். 27) கைது செய்துள்ளனர்.

நேற்று மாலை வரையிலும் 14 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று 16 பேர் கைதாகியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் மாநில எதிர்க்கட்சியான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் அமினுள் இஸ்லாமும் அடங்குவார்.

தேவைப்படுமாயின், கைது செய்யப்பட்டவர்கள் மீது கடுமையான தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா வலியுறுத்தினார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஏப். 27 நண்பகல் 12 மணி நிலவரப்படி, தேசத்துரோக கருத்துகளைக் கூறியதாக டிம்பிள் போரா, தாஹிப் அலி, பிமல் மஹாடோ உள்பட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனப் பதிவிட்டுள்ளார்.

இந்தக் கைது குறித்து ஆங்கில ஊடகத்துக்கு பேட்டியளித்த ஹிமந்த பிஸ்வ சர்மா, நாட்டிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எந்தவித ஒற்றுமையும் இல்லை. இரு நாடுகளும் எதிரி நாடுகளைப் போலவே உள்ளது. இனியும் அந்த நிலை மாறப்போவதில்லை எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.