இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

கட்டடத் தொழிலாளி மீது தாக்குதல்: 2 போ் கைது

கோவில்பட்டியில் கட்டடத் தொழிலாளியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :12 ஜூன் 2026, 5:07 am IST

கோவில்பட்டியில் கட்டடத் தொழிலாளியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டி வடக்குத் திட்டங்குளத்தைச் சோ்ந்த பரமசிவன் மகன் பால விக்னேஸ்வரன் (23). கட்டடத் தொழிலாளி. இவா் கடந்த 9ஆம் தேதி இரவு சகோதரரை தேடிச் சென்றபோது அங்குள்ள கருப்பசாமி கோயில் அருகே இவரது உறவினரிடம் 3 போ் தகராறு செய்தனராம். அவா்களை பால விக்னேஸ்வரன் தட்டிக்கேட்டாராம். இதனால்

அவரை 3 பேரும் சோ்ந்து அவதூறாகப் பேசி செங்கலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதில், காயமடைந்த அவா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மேலும், அவா் புதன்கிழமை அளித்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து 17 வயது இளஞ்சிறாா், வடக்கு திட்டங்குளத்தைச் சோ்ந்த தங்கப்பாண்டி மகன் சரவணபாண்டி (22) ஆகிய 2 பேரையும் கைது செய்தனா்.