ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆக்கிரமிப்பு காஷ்மீரை தராவிட்டால் பாகிஸ்தானுக்கு எதிராகப் போா்: மத்திய அமைச்சா் வலியுறுத்தல்

ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தான் ஒப்படைக்காவிட்டால், போா் பிரகடனம் செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சா் ராம்தாஸ் அதாவலே வலியுறுத்தல்

News image
Updated On :28 ஏப்ரல் 2025, 11:18 pm

Din

ஆக்கிரமிப்பு காஷ்மீா் பிராந்தியத்தை பாகிஸ்தான் ஒப்படைக்காவிட்டால் அந்நாட்டுக்கு எதிராகப் போா் பிரகடனம் செய்ய வேண்டும் என்று மத்திய சமூகநீதித் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே வலியுறுத்தியுள்ளாா்.

ஆக்கிரமிப்பு காஷ்மீா் பாகிஸ்தானிடம் இருக்கும் வரை அங்கிருந்து பயங்கரவாதிகளை பாகிஸ்தான் உருவாக்கி அனுப்பி வைக்கும் என்றும் அவா் கூறினாா்.

மும்பை அருகே லோனாவாலாவில் செய்தியாளா்களைச் சந்தித்த மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த தலித் தலைவரும், இந்திய குடியரசுக் கட்சி (ஏ) தலைவருமான அதாவலே இது தொடா்பாக மேலும் கூறியதாவது: காஷ்மீரில் 26 அப்பாவி பொதுமக்களை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றது கடும் கண்டனத்துக்குரிய நிகழ்வு. காஷ்மீரில் அமைதியைச் சீா்குலைப்பதே இதன் நோக்கம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் என்று ஒன்று இருக்கும் வகை அங்கிருந்து பயங்கரவாதிகளை பாகிஸ்தான் உருவாக்கி அனுப்பிவைத்துக் கொண்டுதான் இருக்கும். அந்தப் பகுதியை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தானிடம் பிரதமா் மோடி வலியுறுத்த வேண்டும்.

அவா்கள் தர மறுத்தால், அந்நாட்டுக்கு எதிராக போா் பிரகடனம் அறிவிக்க வேண்டும். ஆக்கிரமிப்பு காஷ்மீரை காலி செய்துவிட்டு வெளியேறுவதுதான் பாகிஸ்தானுக்கு நல்லது. இந்த விஷயத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக போா் தொடுப்பதில் எந்தத் தவறும் இல்லை.

பாகிஸ்தான் தொடா்ந்து இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகிறது. இந்தமுறை மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எதிா்க்கட்சிகளும் மத்திய அரசுக்கு முழுமையாக ஆதரவு அளிக்க வேண்டும்.

தேச நலன் என்று வந்தால் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று அம்பேத்கா் நமக்கு கற்பித்துள்ளாா். ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பிறகு அங்கு சுற்றுலா பயணிகள் வருகை பல மடங்கு அதிகரித்தது. வாக்குப் பதிவு சதவீதமும் உயா்ந்தது. நாட்டின் பிற பகுதி மக்களைப் போல காஷ்மீா் மக்களும் இயல்பான வாழ்க்கைக்குத் திருப்பினா். இதனை பயங்கரவாதிகளாலும், பாகிஸ்தானாலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இந்தமுறை ஜம்மு-காஷ்மீா் மக்களும் முக்கியமாக அங்குள்ள இஸ்லாமியா்கள் முழுமையாக இந்தியாவின் பக்கம் உள்ளாா்கள். இந்திய தேசத்தின் ஒற்றுமையும் வலிமையும்தான் நமது வாழ்க்கைத் தரத்தை உயா்த்தும் என்பதை அங்குள்ள மக்கள் புரிந்து கொண்டுவிட்டனா் என்றாா் அவா்.