காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசுவள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: இந்து சமய அறநிலையத் துறை நாட்டை பிளவுபடுத்தும் பாஜகதான் தேசவிரோதி! மக்களவையில் கனிமொழி!தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!
/

காஷ்மீரில் சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு!

காஷ்மீரில் சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டது சுற்றுலா வணிகத்துக்கு மிகப்பெரிய பின்னடைவு

News image

காஷ்மீர் - ENS

Updated On :30 ஏப்ரல் 2025, 8:32 pm IST

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக காஷ்மீரில் 48 சுற்றுலாத் தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டதற்கு, பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு விடுதி உரிமையாளர்களும், ஜம்மு - காஷ்மீர் விடுதி அமைப்பினரும் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசின் இந்த நடவடிக்கை காஷ்மீருக்கு வருகைதரும் சாத்தியமான பயணிகளின் எண்ணிக்கையை குறைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து ஜம்மு - காஷ்மீர் விடுதி கூட்டமைப்பின் தலைவர் முஷ்டாக் சையா பேசியதாவது, ''காஷ்மீரில் 48 சுற்றுலாத் தலங்களை மூடும் அரசின் அறிவிப்பு துரதிருஷ்டவசமானது. ஒரே நேரத்தில் 48 சுற்றுலாத் தலங்களை மூடுவது, தவறான செய்தியை வெளியே பரப்பும். ஜம்மு - காஷ்மீருக்குச் சுற்றுலா செல்லத் திட்டமிட்டிருந்தவர்களுக்கு இது மிகப்பெரிய தயக்கத்தை ஏற்படுத்தும். இதனால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கனிசமாகக் குறையும். இது காஷ்மீர் சுற்றுலா வணிகத்துக்கு மிகப்பெரிய பின்னடைவு'' எனக் குறிப்பிட்டார்.

ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்துக்குட்பட்ட பஹல்காம் பகுதியில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் கடந்த 22ஆம் தேதி கொடூரமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியது. அதோடு மட்டுமின்றி பாகிஸ்தான் உடனான பல்வேறு தொடர்புகளையும் துண்டித்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக காஷ்மீர் பள்ளத்தாக்கில் தூஷ்பத்ரி, கோகா்நாக், டக்சம், அச்சாபல், பாங்குஸ் பள்ளத்தாக்கு, சிந்தன் மற்றும் மாா்கன் டாப் உள்ளிட்ட 48 சுற்றுலாத் தலங்களை தற்காலிகமாக மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.