காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

சைபர் மோசடியால் ரூ. 1.2 லட்சம் கோடியை இந்தியர்கள் இழப்பார்களா? நீங்களும் ஜாக்கிரதையாக இருங்கள்!

கடந்தாண்டில் மட்டும் சைபர் குற்றங்கள் மற்றும் மோசடிகளால் இந்தியர்களிடம் ரூ. 22,842 கோடி கொள்ளை

News image
பிரதிப் படம்- ENS
Updated On :1 ஆகஸ்ட் 2025, 11:19 am

இணையதளச் செய்திப் பிரிவு

கடந்தாண்டில் மட்டும் சைபர் குற்றங்கள் மற்றும் மோசடிகளால் இந்தியர்களிடம் ரூ. 22,842 கோடி கொள்ளையடிக்கப்பட்டதாக தில்லி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சைபர் குற்றங்கள் மற்றும் மோசடி சம்பவங்கள் நாள்தோறும் நடந்தவண்ணம் இருந்து வருகிறது. இதனைத் தவிர்க்க சைபர் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், குற்றங்களும் அதனால் இழப்புகளும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன.

இந்த நிலையில், சைபர் குற்றங்கள் குறித்து தில்லியில் ஆய்வு நடத்தப்பட்டது. கடந்தாண்டில் மட்டும் சைபர் மற்றும் மோசடி குற்றங்களால் ரூ. 22,842 கோடியை இந்தியர்கள் இழந்துள்ளதாக ஆய்வு கூறுகிறது. இது 2023-ல் நிகழ்த்தப்பட்ட ரூ. 7,465 கோடியைவிட கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகமாகும்; 2022-ல் ரூ. 2,306 கோடியைவிட 10 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி, நடப்பாண்டில் ரூ. 1.2 லட்சம் கோடிக்குமேல் இந்தியர்கள் இழப்பர் என்றும் கணித்துள்ளனர்.

2023-ல் சுமார் 15.6 லட்சமாக இருந்த சைபர் குற்றம் தொடர்பான புகார்கள், 2024-ல் 20 லட்சமாக அதிகரித்துள்ளது.

2024, ஜனவரி மாதத்தில் மட்டும் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் தளங்கள் தொடர்பாக பதிவுசெய்யப்பட்ட சைபர் புகார்களின் எண்ணிக்கை 15,000. அதற்கு அடுத்த மாதமான பிப்ரவரியில் 14,000 மற்றும் மார்ச்சில் 15,000 புகார்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

summary

Digital Fraud, Cybercriminals Stole Rs 23,000 Crore From Indians In 2024

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.