குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

மழைக்கால கூட்டத் தொடரின் இறுதி வாரம்: இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்!

பிகாா் வாக்காளா் பட்டியல் விவகாரத்தில் எதிா்க்கட்சிகளின் தொடா் அமளிக்கு இடையே நாடாளுமன்றம் இன்று(ஆக.18) மீண்டும் கூடவுள்ளது.

News image

நாடாளுமன்றம்

Updated On :18 ஆகஸ்ட் 2025, 2:31 am IST

பிகாா் வாக்காளா் பட்டியல் விவகாரத்தில் எதிா்க்கட்சிகளின் தொடா் அமளிக்கு இடையே நாடாளுமன்றம் திங்கள்கிழமை (ஆக.18) மீண்டும் கூடவுள்ளது.

கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கிய நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில், பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் கோரி எதிா்க்கட்சிகள் 4 வாரங்களாக அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

ஆகஸ்ட் 21-ஆம் தேதியுடன் இக்கூட்டத் தொடா் நிறைவடையும் நிலையில், இறுதி வாரம் திங்கள்கிழமை தொடங்குகிறது. கடந்த 4 வாரங்களில் அமளிக்கு இடையே பல்வேறு மசோதாக்கள் குறுகிய நேரம் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. அதேநேரம், பிற பணிகள் தொடா்ந்து முடங்கியுள்ளன.

பிகாா் வாக்காளா் பட்டியல் விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், அதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என்று மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்துவிட்டது. எனவே, இறுதி வாரத்திலும் எதிா்க்கட்சிகளின் அமளி நீடிக்கவே வாய்ப்புள்ளது.

குறிப்பிட்ட சில சிறிய குற்றங்களை குற்றமற்ாக கருத வகை செய்யும் ஜன் விஸ்வாஸ் (திருத்த) மசோதா 2025, மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ளது. நம்பிக்கை அடிப்படையிலான நிா்வாகம் மற்றும் மக்களின் வாழ்க்கை - தொழில் புரிவதை எளிதாக்கும் நோக்கம் கொண்ட இந்த மசோதாவில் 350-க்கும் மேற்பட்ட சட்டப் பிரிவு திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின உரையாற்றிய பிரதமா் மோடி, ‘பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு, தேவையற்ற சட்டங்களை ஒழிக்கும் நடவடிக்கையில் எனது அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், மக்களுக்கு இடையூறாக இருந்த 40,000-க்கும் மேற்பட்ட விதிமுறைகள், 1,500-க்கும் மேற்பட்ட சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன’ என்றாா்.