ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில், மேகவெடிப்பினால் ஏற்பட்ட வெள்ளத்தில் பலியானோரது எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிஷ்த்வார் மாவட்டத்தில், கடந்த ஆக.14 ஆம் தேதி, மாலை ஏற்பட்ட மேகவெடிப்பினால், திடீரென வெள்ளம் ஏற்பட்டு ஏராளமான குடியிருப்புகள் நீருக்குள் மூழ்கின.
இதையடுத்து, மலை மீது அமைந்துள்ள மசாலி மாதா கோயிலுக்கு செல்வதற்காக அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, அங்கு தற்போது வெள்ளத்தில் பலியான பெண் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளதால், பலியானோரது எண்ணிக்கை மொத்தம் 66 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாயமான 75 பேரை தேடும் பணிகள் 6-வது நாளாக இன்றும் (ஆக.19) தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்தப் பேரிடரில், பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், ராணுவம் உள்பட ஏராளமான படைகள் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பருத்தி மீதான 11% இறக்குமதி வரி ரத்து! மத்திய அரசு
Summary
The death toll in cloudburst floods in Jammu and Kashmir's Kishtwar district has risen to 64, it has been reported.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விசாகப்பட்டினம் எஃகு ஆலை விபத்து: 9 ஆக உயர்ந்த பலி!
மாளவியா நகா் ஹோட்டல் தீ விபத்து: உயிரிழந்தோா் எண்ணிக்கை 22-ஆக அதிகரிப்பு!
காகித ஆலையில் ரசாயனக் கசிவு: அமெரிக்காவில் 11 பேர் பலி!

முதல்வர் விஜய்க்கு ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா வாழ்த்து!
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech



