ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

இந்திய வானில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடை நீட்டிப்பு!

இந்திய வான்வழியை பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது குறித்து...

News image
கோப்புப் படம்
Updated On :23 ஆகஸ்ட் 2025, 7:12 am

இணையதளச் செய்திப் பிரிவு

இந்திய வான்வழியை பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையானது செப்.24 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் ஆபரேஷன் சிந்தூர் எனும் ராணுவ நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்களின் மீது இந்தியா தாக்குதல் நடத்தி தகர்த்தது.

இதனைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையில் போர் தாக்குதல் தொடங்கியதுடன், இருநாடுகளும் தங்களது வான்வழியைகளை மூடின. மேலும், இருநாடுகளிலும் வசித்த இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் தங்களது தாயகங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

இத்துடன், இந்திய வான்வழியில் பாகிஸ்தானின் பயணிகள் மற்றும் போர் விமானங்கள் ஆகியவை நுழைவதற்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்தத் தடையானது, கடந்த மே மாதம் அமல்படுத்தப்பட்டதுடன், தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்திய வான்வழியை பாகிஸ்தான் விமானங்கள் பறக்கக்கூடாது எனவும், இந்தத் தடையானது வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும், நேற்று (ஆக.22) அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பாகிஸ்தான் வான்வழியில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்டுள்ள தடையும் செப்.24 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

The ban on Pakistan's use of Indian airspace has been extended until September 24th.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.