உத்தரகண்டில் சமோலி மாவட்டத்தின் தாராலியில், மேகவெடிப்பால் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க இந்திய ராணுவப் படைகள் களமிறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமோலி மாவட்டத்தின் தாராலியில், நேற்று (ஆக.22) நள்ளிரவு ஏற்பட்ட மேகவெடிப்பால் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. இதனால், அங்குள்ள வீடுகள் மற்றும் கட்டமைப்புகளினுள் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வாகனங்கள் மற்றும் இடிபாடுகள் முழுவதும் நிரப்பியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, தாராலியை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையில் இடிபாடுகள் சூழ்ந்துள்ளதால், அங்கு மீட்புப் படைகள் செல்வதற்கு தாமதமாவதாகக் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, தற்போது அங்கு மாநில, தேசிய மீட்புப் படைகள் முடக்கங்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெள்ளம் மற்றும் மண்சரிவினால் 20 வயதுடைய பெண் ஒருவர் மற்றும் ஒரு முதியவர் மாயமாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணியில் மோப்ப நாய்களின் உதவியுடன் இந்திய ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்திய வானிலை ஆய்வு மையம், உத்தரகண்டின் டெஹ்ராடூன், தெஹ்ரி, பௌரி கார்வால், உத்தரகாசி, சமோலி, ருத்ராபிரயாக், நைனிடல், அல்மோரா மற்றும் உத்தம் சிங் நகர், ரிஷிகேஷ் உள்ளிட்ட ஏராளமான பகுதிகளுக்கு அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: வங்கி மோசடி: அனில் அம்பானி மீது வழக்குப் பதிவு! சிபிஐ சோதனை
Summary
Army forces have reportedly been deployed to rescue people affected by floods caused by heavy rains triggered by cloudbursts in Dharali, Chamoli district of Uttarakhand.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வழிப்பறியில் ஈடுபட்ட 4 போ் கைது

ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்!

பலத்த மழையால் உத்தரகண்டில் நிலச்சரிவு! 120 சாலைகள் மூடல்!

வெள்ளத்தில் தத்தளிக்கும் சூரத்! இயல்பு வாழ்க்கை முடக்கம்: மீட்புப் பணிகள் தீவிரம்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



