மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கைலாஷ் - மானசரோவர் யாத்திரை நிறைவு!

சிக்கிமில் உள்ள நாது லா கணவாய் வழியாக கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை நிறைவடைந்துள்ளது.

News image
கைலாஷ் மானசரோவர்
Updated On :25 ஆகஸ்ட் 2025, 6:56 am

இணையதளச் செய்திப் பிரிவு

சிக்கிமில் உள்ள நாது லா கணவாய் வழியாக கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை 48 சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட 10வது குழுவுடன் யாத்திரை நிறைவடைந்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை 48 பக்தர்களை சிக்கிம் சுற்றுலா மேம்பாட்டுக் கழக அதிகாரிகள் வரவேற்றனர், மேலும் 2025ஆம் ஆண்டிற்கான கைலாஷ் மானசரோவர் யாத்திரையின் வெற்றிகரமான முடிவைக் குறிக்கும் வகையில் பாராட்டு விழாவும் நடைபெற்றது.

சிக்கிம் சுற்றுலா மேம்பாட்டுக் கழக தலைவர் லுகேந்திர ரசைலி கூறுகையில்,

அதிகாரிகளின் அர்ப்பணிப்புப் பணியின் காரணமாக இந்தாண்டு சுமார் 500 பக்தர்கள் கைலாஷ் மானசேரோவர் சுற்றுப்பயணத்தை சுமூகமாக நிறைவு செய்தனர்.

யாத்திரை எந்தவித இடையூறும் இல்லாமல் நிறைவடைவதை உறுதி செய்வதற்காகத் துணை ராணுவப் படைகள் மற்றும் பிற நிறுவனங்களின் ஆதரவுடன் பக்தர்களுக்குப் பல்வேறு ஏற்பாடுகளை அவர்கள் செய்தனர்.

இந்தியா-சீன ராணுவத்தினர் இடையே கல்வான் பகுதியில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாகக் கைலாஷ் மானசரோவர் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்தாண்டு யாத்திரைக்காக 750 இந்தியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் 500 பேர் நாது லா பாதை வழியாக 10 குழுக்களாகவும், 250 பேர் உத்தரகண்டில் உள்ள லிபுலேக் கணவாய் வழியாகவும் பயணம் செய்தனர்.

இந்த யாத்திரையானது ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மக்களால் மேற்கொள்ளப்படுகிறது. இந்த யாத்திரையில் 19,500 அடி உயரத்தில், மோசமான வானிலை மற்றும் கரடுமுரடான பாதைகளில் மலையேறப்படுகிறது. உடல் ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் தகுதியற்றவர்களே இந்த யாத்திரைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

summary

The Kailash Manasarovar Yatra via Nathu La Pass in Sikkim ended with the return of the 10th batch of 48 tourists from the pilgrimage site, officials said on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.