இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

மும்ப்ராவில் பையில் கண்டெடுக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் !

மும்ப்ராவில் பையில் இருந்து கிட்டத்தட்ட 200 வாக்காளர் அடையாள அட்டைகள் கண்டெக்கப்பட்டுள்ளன.

Voter ID cards found in bag in Mumbra

வாக்காளர் அடையாள அட்டை (கோப்புப்படம்)

Published On :

மும்ப்ராவில் பையில் இருந்து கிட்டத்தட்ட 200 வாக்காளர் அடையாள அட்டைகள் கண்டெக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிர மாநிலம், மும்ப்ராவில் விநாயகர் சதுர்த்தி நிறைவடைந்ததைத்தொடர்ந்து அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தூய்மை பணியின்போது பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த பையை திறந்து பார்த்துள்ளனர்.

அதில் 200 வாக்காளர் அடையாள அட்டைகள் இருந்தது தெரிய வந்தது.

உடனே காங்கிரஸ் தொகுதித் தலைவர் நிலேஷ் பாட்டீல் தலைமையிலான குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது வாக்காளர் அடையாள அட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள பல முகவரிகள் இல்லை என்பதைக் அவர்கள் கண்டு பிடித்தனர்.

அதைத்தொடர்ந்து இந்த ஆவணங்களை 149 பேரவைத் தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரி சந்தீப் தோரட்டிடம் சமர்ப்பித்த காங்கிரஸ் பிரதிநிதிகள் குழு, உயர்மட்ட விசாரணை வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

அதேசமயம் இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு நாடெங்கிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மும்ப்ராவில் பையில் இருந்து கிட்டத்தட்ட 200 வாக்காளர் அடையாள அட்டைகள் கண்டெக்கப்பட்ட சம்பவம் மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Summary

The Thane unit of the Congress on Friday approached poll authorities after nearly 200 voter ID cards were recovered from a bag in Mumbra.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.