ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

26 ஆண்டுகளுக்குப் பின்..! இளைஞரின் நுரையீரலில் இருந்த பேனா மூடியை அகற்றிய மருத்துவர்கள்!

தில்லியில் இளைஞரின் நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடி அகற்றப்பட்டுள்ளது குறித்து...

News image
இளைஞரின் நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடி...
Updated On :30 ஆகஸ்ட் 2025, 1:57 pm

இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியில், 26 ஆண்டுகளாக இளைஞர் ஒருவரின் நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சையின் மூலம் அகற்றியுள்ளனர்.

தில்லியில், 33 வயதுடைய இளைஞர் ஒருவர் சமீபத்தில் தொடர் இருமல் மற்றும் சளியில் ரத்தக் கசிவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, மருத்துவர்கள் மேற்கொண்ட எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனைகளின் மூலம், அவரது நுரையீரலின் பேனா மூடி ஒன்று சிக்கியுள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து, மருத்துவமனை வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டிருந்ததாவது:

“அந்த இளைஞர் 7 வயது சிறுவனாக இருந்தபோது, விளையாட்டாக பேனா மூடியை விழுங்கியுள்ளார். ஆனால், அப்போது அது அவரது உடல் நிலையில் எந்தவொரு பாதிப்பையும் உருவாக்கவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மருத்துவர் சபியாசாச்சி பாய் தலைமையிலான குழுவினர், அறுவைச் சிகிச்சையின் மூலம், 26 ஆண்டுகளாக அவரது நுரையீரலில் சிக்கியிருந்த பிளாஸ்டிக் பேனா மூடியை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

இதுபோன்ற, சம்பவங்கள் இந்தியாவில் மிகவும் அரிது எனவும், நுரையீரலில் இத்தனை ஆண்டுகளாக சிக்கியிருந்த பொருளானது உயிருக்கு எந்தவொரு ஆபத்தும் ஏற்படுத்தாமல் இருந்தது மிகவும் அதிசயமான ஒன்று எனவும், மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

summary

In Delhi, doctors have successfully surgically removed a pen cap that had been stuck in a young man's lung for 26 years.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.