மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்: மும்பையில் போலீஸாரின் விடுமுறைகள் ரத்து

மராத்தா போராட்டத்தைத் தொடர்ந்து மும்பையில் அனைத்து போலீஸாரின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சனிக்கிழமை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

News image
மும்பையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒரு பகுதியினர்.
Updated On :30 ஆகஸ்ட் 2025, 11:09 am

தினமணி செய்திச் சேவை

மராத்தா போராட்டத்தைத் தொடர்ந்து மும்பையில் அனைத்து போலீஸாரின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சனிக்கிழமை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், நிலைமையைக் கருத்தில் கொண்டு, அனைத்து போலீஸாரின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேசமயம் விடுமுறையில் உள்ள போலீஸார் விரைவில் பணிக்குத் திரும்ப வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்றார்.

மராத்தா இடஒதுக்கீட்டை வலியுறுத்தி சமூக ஆர்வலர் மனோஜ் ஜராங்கே மும்பையின் ஆசாத் மைதானத்தில் நேற்று தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார். உரிய இடஒதுக்கீட்டை அரசு வழங்கும் வரை பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவருக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் மும்பையில் கூடியுள்ளதால் மும்பை நகரமே ஸ்தம்பித்துள்ளது. போராட்டத்திற்கு 5,000 பேருக்கு மட்டுமே போலீஸார் அனுமதி வழங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால் அந்த எண்ணிக்கையும் தாண்டி ஏராளமானோர் கூடியுள்ளதால் 2,000க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த எண்ணிக்கை வரும் நாள்களில் மேலும் அதிகரிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் போராட்டத்தால் பேருந்துச் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மராத்தா போராட்டத்தால் ஒருபுறம் மும்பையே ஸ்தம்பித்துள்ள நிலையில் மற்றொரு புறம் 10 நாள் விநாயகர் சதுர்த்தி பண்டிகையையும் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Thousands of Maratha quota supporters have gathered in south Mumbai in support of activist Manoj Jarange, who launched an indefinite hunger strike at Azad Maidan.


தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.