மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!
/

பிரதமர் மோடியுடன் உக்ரைன் அதிபர் உரையாடல்!

பிரதமர் நரேந்திர மோடியுடன் உக்ரைன் அதிபர் செல்போனில் பேசியது குறித்து...

News image

உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலன்ஸ்கி - இந்திய பிரதமர் நரேந்திர மோடி - ஏபி

Updated On :30 ஆகஸ்ட் 2025, 9:11 pm IST

பிரதமர் நரேந்திர மோடியுடன், உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி செல்போன் வாயிலாக உரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, சுமார் 7 ஆண்டுகள் கழித்து அரசு முறைப் பயணமாக சீனாவுக்குச் சென்றுள்ளார். இந்தப் பயணத்தின் இடையில், அவர் ரஷியாவுடனான போர் குறித்து, உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கியுடன் செல்போனில் உரையாடியுள்ளார்.

இதுகுறித்து, தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:

”இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்ட அதிபர் ஸெலன்ஸ்கிக்கு நன்றி. நடைபெற்று வரும் மோதல், அதன் மனிதாபிமான தேவை மற்றும் அமைதி ஆகியவற்றை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் குறித்த எங்களது கருத்துக்களை நாங்கள் பகிர்ந்துக் கொண்டோம்.

இதற்காக, மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா முழு ஆதரவை வழங்கும்” எனக் கூறியுள்ளார்.

இதேபோல், அதிபர் ஸெலன்ஸ்கியும் பிரதமர் மோடியுடனான உரையாடல் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், பிரதமர் மோடியுடன் வாஷிங்டனில் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் பேசிய உரையாடல் குறித்து பகிர்ந்துக் கொண்டதாகவும், விரைவில் அவரை சந்திப்பதில் மகிழ்ச்சி என்றும் அதிபர் ஸெலன்ஸ்கி கூறியுள்ளார்.

முன்னதாக, ரஷியாவுடன் எண்ணெய் வர்த்தகம் செய்து, உக்ரைன் மீது அந்நாடு போர் தொடுக்க இந்திய அரசு உதவுவதாக, அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Ukrainian President Volodymyr Zelensky spoke to Prime Minister Narendra Modi over the phone.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.