மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜார்க்கண்ட்: நிலத்தடி சுரங்கத்தில் விஷவாயு கசிவு! பெண் பலி; 1000 பேர் வெளியேற்றம்!

ஜார்க்கண்ட் தன்பாத் நிலத்தடி சுரங்கத்தில் விஷவாயு கசிவு ஏற்பட்டுள்ளது குறித்து...

News image
கோப்புப் படம்- PTI
Updated On :4 டிசம்பர் 2025, 11:02 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஜார்க்கண்ட் மாநிலத்தில், நிலத்தடி சுரங்கத்தில் விஷவாயு கசிவு ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள 1,000-க்கும் அதிகமான மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தன்பாத் மாவட்டத்தின், கெண்டுவாடி பஸ்தி பகுதியின் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள நிலத்தடி சுரங்கங்களில் இருந்து கார்பன் மோனாக்ஸைட் எனும் விஷவாயு கசிந்து, நேற்று (டிச. 3) பெண் ஒருவர் பலியானார்.

இத்துடன், விஷவாயு தாக்கி 12 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருப்பினும், பெண்ணின் மரணத்திற்கான காரணம் குறித்த முழுமையான தகவல் உடற்கூராய்வு சோதனையின் அறிக்கை வெளியான பிறகே தெரிய வரும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், விஷவாயு தாக்கம் அதிகமுள்ள ஆபத்தான பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் பணிகளில் பிசிசிஎல் நிறுவனம் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அங்குள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறக் கூறி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதுடன், அவரச ஊர்திகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால், பிசிசிஎல் நிறுவனம் உள்ளூர் மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

summary

In Jharkhand, more than 1,000 people are being evacuated due to a toxic gas leak from an underground mine.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.