நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

பாலியல் வழக்கு எனக்கு எதிராகத் தீட்டப்பட்ட சதித் திட்டம்: நடிகர் திலீப்

பாலியல் வழக்கு எனக்கு எதிராகத் தீட்டப்பட்ட சதித் திட்டம் என்று நடிகர் திலீப் கூறினார்.

News image

நடிகர் திலீப்

Updated On :8 டிசம்பர் 2025, 0:17 pm IST

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு எனக்கு எதிராகத் தீட்டப்பட்ட சதித்திட்டம் என்று நடிகர் திலீப் கூறியிருக்கிறார்.

கேரளத்தில் முன்னணி நடிகை ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி விடுதலை செய்யப்பட்ட நடிகர் திலீப், செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.

தமிழ், மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான நடிகை ஒருவர், கடந்த 2017ஆம் ஆண்டு ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில், பாலியல் வன்கொடுமை சம்பவத்தைத் தூண்டியதாகக் கூறி நடிகர் திலீப் மற்றும் அவரது நண்பர் சரத் ஆகீயோர் சேர்க்கப்பட்டு, கைது செய்யப்பட்டனர். 85 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகர் திலீப், பிறகு ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த நிலையில், 8 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று 6 பேர் குற்றவாளிகளாக அறிவித்த நீதிமன்றம், நடிகர் திலீப் மற்றும் அவரது நண்பரை விடுதலை செய்திருக்கிறது. இவர்களுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது.

அப்போது அவர் கூறியதாவது, நடிகை பாலியல் வழக்கு எனக்கு எதிராகத் தீட்டப்பட்ட சதித் திட்டம். இந்த வழக்கில் எனக்கு எதிராக ஆதாரங்கள் இல்லாததால் நீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. நான் எந்த தவறும் செய்யவில்லை என்று ஆரம்பம் முதலே கூறி வருகிறேன் என்று நடிகர் திலீப் கூறியிருக்கிறார்.

முன்னதாக, நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என்று நடிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பாக நடிகர் ஒருவர் கைது செய்யப்பட்டது கேரளத்தை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியிருந்தது.

Summary

Actor Dileep said that the sexual assault case was a conspiracy against him.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.