டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

போர்க்களமான சால்ட் லேக் திடல்..! ஊழல் நடந்ததாக மெஸ்ஸி ரசிகர்கள் போராட்டம்!

சால்ட் லேக் திடலில் நடந்த போராட்டம் குறித்து...

News image

சால்ட் லேக் திடலில் மெஸ்ஸி, அவரது ரசிகர்கள். - படங்கள்: ஏஎன்ஐ

Updated On :13 டிசம்பர் 2025, 1:23 pm IST

கொல்கத்தா சால்ட் லேக் திடலில் மெஸ்ஸியைப் பார்க்க குவிந்த ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மெஸ்ஸியைப் பார்க்க ரூ.10 லட்சம் செலவிட்ட நிலையில் மனமுடைந்த ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இன்று அதிகாலை கொல்கத்தா வந்த லியோனல் மெஸ்ஸி முதலில் தனது 70 அடி உயர சிலையை காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

பின்னர், சால்ட் லேக் திடலுக்கு வந்தார். அங்கு கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அடுத்ததாக மோகன் பகான் அணியின் மெஸ்ஸி ஆல் ஸ்டார் அணியும் டையமண்ட் ஆர்பர் ஆல் ஸ்டார் அணியும் விளையாட இருந்தது.

மெஸ்ஸி சால்ட் லேக் திடலை விட்டு சென்றதால், ரசிகர்கள் நாற்காலிகளை தூக்கி வீசத் தொடங்கினார்கள்.

இதனால் சால்ட் லேக் திடலே போர்க்களம் போல் காட்சி அளித்தது.

ரசிகர் ஒருவர் ஏஎன்ஐக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது...

விழாவை மிகவும் மோசமாக ஏற்பாடு செய்துள்ளார்கள். இங்கு வந்திருப்பவர்கள் எல்லாமே கால்பந்து ரசிகர்கள்.

அனைவரும் மெஸ்ஸியைப் பார்க்கவே வந்திருக்கிறோம். ஆனால், இங்கு நடந்திருப்பது முழுமையான ஊழல். எங்களுக்கு பணம் திருப்பித் தர வேண்டும்.

கொல்கத்தா கால்பந்துக்கு புகழ்பெற்றது. விழா ஏற்பட்டாளர்கள் மிகவும் மோசம். இது கொல்கத்தாவின் கறுப்பு நாள். நாங்கள் கால்பந்தை, ஆர்ஜென்டீனாவை நேசிக்கிறோம்.

இந்த அனுபவம் முழுமையான ஸ்கேம். அமைச்சரும் அவரது குழந்தைகள் மட்டுமே உடன் இருக்கிறார்கள். மற்றவர்கள் யாருமே பார்க்க முடியவில்லை. நாங்கள் மிகவும் மனமுடைந்துள்ளோம் என்றார்.

Summary

Fans who gathered at the Salt Lake Stadium in Kolkata to see Messi are engaging in unruly behavior.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.