ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விகிதம் குறைவு!

ஏப்ரல் - ஜூன் காலாண்டில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விகிதம் 9.67 லட்சம் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :15 டிசம்பர் 2025, 4:49 pm

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியாவுக்கு வருகைப்புரிந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விகிதம் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 9.67 லட்சம் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜனவரி - மார்ச் காலகட்டத்தில் 26.15 லட்சத்தில் இருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டாவது காலாண்டில் 16.48 லட்சமாகக் குறைந்துள்ளது. எனினும் மூன்றாவது காலாண்டில் சற்று அதிகரித்துள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில், கடந்த காலாண்டில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்ட சரிவையும், அந்தச் சரிவுக்குக் காரணமான காரணிகளின் விவரங்களையும் அரசாங்கம் கவனத்தில் எடுத்துக்கொண்டதா? என்று மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.

மக்களவையில் இதற்கு பதில் அளித்துப் பேசிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், முதல் மூன்று காலாண்டில் இந்தியாவுக்கு வருகைப்புரிந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 61.83 லட்சமாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.

ஜனவரி - மார்ச் காலகட்டத்தில் 26.15 லட்சத்தில் இருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டாவது காலாண்டில் 16.48 லட்சமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார். மூன்றாவது காலாண்டில் (ஜூலை - செப்டம்பர்) 19.20 லட்சமாக சற்று அதிகரித்துள்ளது.

அண்டை நாடான வங்கதேசத்தில் நிகழ்ந்த வன்முறை, அதனால் பயண வழிப்பாதையில் ஏற்பட்ட இடையூறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்துள்ளதாகவும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.

summary

Foreign tourist arrivals in India down by 9.67 lakh in April-June quarter

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.