மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஆபரேஷன் சிந்தூர் 2.0? எல்லையில் பாக். ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள்!

பாகிஸ்தானின் எல்லைக் கோட்டுப் பகுதியில் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை பாக். ராணுவம் அதிகரித்துள்ளதாக உளவுத் துறை தகவல்

News image

ஆபரேஷன் சிந்தூர்

Updated On :26 டிசம்பர் 2025, 1:49 pm

இணையதளச் செய்திப் பிரிவு

பாகிஸ்தானின் எல்லைக் கோட்டுப் பகுதியில் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை அந்நாட்டு ராணுவம் அதிகரித்துள்ளதாக உளவுத் துறை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் எல்லைக் கோட்டுப் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளதாக உளவுத் துறை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்திய ராணுவம், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை மே மாதத்தில் நடத்தியது. இந்தப் போரை நிறுத்திக் கொள்ளலாம் என்று பாகிஸ்தான் விடுத்த வேண்டுகோளையடுத்து, இந்தியா தாக்குதலை நிறுத்தியது.

இந்த நிலையில், மீண்டும் ஆபரேஷன் சிந்தூரின் இரண்டாம் நடவடிக்கையை இந்தியா மேற்கொள்ளும் என்ற அச்சத்தால் பாகிஸ்தான் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை நிறுவப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.