ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

குடியரசுத் தலைவர் டிச.28-ல் நீர்மூழ்கி கப்பலில் பயணம்!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நீர்மூழ்கி கப்பலில் பயணம் மேற்கொள்வது குறித்து...

News image

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு (கோப்புப் படம்) - எக்ஸ்

Updated On :26 டிசம்பர் 2025, 6:40 pm IST

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வரும் டிச.28 ஆம் தேதி நீர்மூழ்கி கப்பல் மூலம் கடலில் பயணம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வரும் டிச.27 ஆம் தேதி நான்கு நாள் அரசு முறைப் பயணமாக, கோவா, கர்நாடகம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்குச் செல்கின்றார்.

கோவாவில் இருந்து டிச.28 ஆம் தேதி கர்நாடக மாநிலத்துக்குச் செல்லும் குடியரசுத் தலைவர் முர்மு, அங்குள்ள கார்வார் துறைமுகத்தில் இருந்து நீர்மூழ்கி கப்பல் மூலம் கடல் பயணம் மேற்கொள்கின்றார்.

இதனைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் மாநிலத்தில் திங்களன்று (டிச. 29) நடைபெறும் பழங்குடியின சந்தாலி மொழியின் ஓல் சிக்கி எழுத்து முறையின் நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் முர்மு கலந்துகொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, சந்தாலி மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்ட அரசியலமைப்பை, முர்மு வெளியிட்டிருந்தார். இதையடுத்து, ஜம்ஷெத்பூரில் உள்ள என்.ஐ.டி. கல்லூரியில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் அவர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார் எனக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தியாவின் மேம்படுத்தப்பட்ட பன்முகத் தாக்குதல் திறன் கொண்ட போர் விமானமான ரஃபேலில், கடந்த அக்டோபர் மாதம் குடியரசுத் தலைவர் முர்மு பறந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

It has been reported that President Droupadi Murmu will be undertaking a sea voyage in a submarine on December 28th.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.