ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

நொய்டா: குப்பை கிடங்கில் அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் கண்டெடுப்பு!

நொய்டாவின் மத்திய பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

News image
Updated On :28 டிசம்பர் 2025, 7:30 pm

தினமணி செய்திச் சேவை

நொய்டாவின் மத்திய பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

சனிக்கிழமை குப்பை கிடங்கில் உள்ள குப்பை குவியலில் இருந்து உடல் மீட்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

அந்த பெண்ணின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று கூடுதல் காவல் துணை ஆணையா் (மத்திய நொய்டா) சந்தோஷ் குமாா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் கூறுகையில், ‘சனிக்கிழமை செக்டா் 142 காவல் நிலைய எல்லைக்குள்பட்ட குப்பை கிடங்கில் அடையாளம் காணப்படாத ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

அந்தப் பெண்ணின் வயது சுமாா் 22 முதல் 25 வயது இருக்கும். உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது. இறந்தவரை அடையாளம் காண பணிகள் நடைபெற்று வருகிறது. உடல் எந்த சூழ்நிலையில் குப்பைக் கிடங்குக்கு கொண்டு வரப்பட்டது என்பதைக் கண்டறியவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேவையான பிற சட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்று அவா் கூறினாா்.