தியாகிகள் நாள்! முதல்வர் விஜய் வீரவணக்கம்!மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழகத்தில் ஆக.1 - 30 வரை வீடுகள் கணக்கீடு : இணையத்தில் இன்றுமுதல் மக்கள் சுயமாக விவரம் பதிவிடலாம்கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று வெப்ப அலை மழைக்கால கூட்டத் தொடா்: இன்று பாஜக கூட்டணி கூட்டம் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: இன்று தொடங்கி வைக்கிறாா் பிரதமா் - ரயில்வே துறையில் புதிய அத்தியாயம் சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு குறைவு
/

பகையை முடிவுக்குக் கொண்டு வர கவனம் செலுத்த வேண்டும் - புதின் வீட்டின் மீதான தாக்குதலுக்கு மோடி வருத்தம்!

ரஷிய அதிபர் புதின் வீட்டைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பிரதமர் மோடி வருத்தம்...

News image

ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி (கோப்புப் படம்) - எக்ஸ்

Updated On :30 டிசம்பர் 2025, 1:48 pm IST

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினின் வீட்டைக் குறிவைத்து உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.

ரஷிய அதிபர் புதினின் விட்டைக் குறிவைத்து, உக்ரைன் ராணுவம் 91 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை உக்ரைன் அரசு நிராகரித்துள்ளது.

இருப்பினும், உக்ரைன் மீதான ரஷியாவின் இந்தப் பரபரப்பு குற்றச்சாட்டுகளுக்கு உலகின் முக்கிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தாக்குதலில் ரஷிய அதிபர் புதினின் வீடு குறிவைக்கப்பட்டதாக வெளியாகும் செய்திகள் அனைத்தும் வருத்தமளிக்கின்றன என பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, அவர் அந்தப் பதிவில் கூறியதாவது:

“ரஷிய அதிபரின் வீடு குறிவைக்கப்பட்டதாக வெளியாகும் செய்திகள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். பகையை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் சம்பந்தப்பட்ட அனைவரும் கவனம் செலுத்துமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.