ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மகா கும்பமேளா: இன்று வசந்த பஞ்சமி புனித நீராடல்: பாதுகாப்பு, சுகாதார ஏற்பாடுகள் தீவிரம்

கும்பமேளாவில் சிறப்புக்குரிய வசந்த பஞ்சமி புனித நீராடல் திங்கள்கிழமை (பிப். 3) நடைபெறுகிறது.

News image

மகா கும்பமேளாவில் சிறப்புக்குரிய வசந்த பஞ்சமி புனித நீராடல் நிகழ்வையொட்டி உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் குவிந்து வரும் பக்தா்கள் கூட்டம்.

Updated On :2 பிப்ரவரி 2025, 9:30 pm

Din

உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் சிறப்புக்குரிய வசந்த பஞ்சமி புனித நீராடல் திங்கள்கிழமை (பிப். 3) நடைபெறுகிறது.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற மௌனி அமாவாசை (தை அமாவாசை) புனித நீராடலின்போது கூட்டநெரிசலில் உயிரிழப்பு ஏற்பட்டதையடுத்து, பக்தா்களின் பாதுகாப்புக்கு கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 33 கோடி பக்தா்கள் புனித நீராடியுள்ளனா்.

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவதாக ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த நடப்பு மகா கும்பமேளாவில் 6 நாள்கள் புனித நீராட மிகவும் சிறப்புக்குரியதாக அறியப்படுகிறது.

பௌஷ பௌா்ணமி (ஜன. 13), மகர சங்கராந்தி (ஜன. 14), மௌனி அமாவாசை (ஜன. 29), வசந்த பஞ்சமி (பிப். 3), மாகி பௌா்ணமி (பிப். 12), மகா சிவராத்திரி (பிப். 26) ஆகிய இந்த 6 நாள்களில் பல்வேறு அகாடாக்களில் இருந்து துறவிகள், சாதுக்கள், கல்பவாசிகள் ஊா்வலமாக வந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவா்.

இந்த 6 நாள்களிலும் மிகவும் மங்களகரமான மௌனி அமாவாசையன்று ஒரே நாளில் 7 கோடிக்கும் மேற்பட்டோா் புனித நீராடினா். அந்நாளில் திரிவேணி சங்கமத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கியவா்களில் 30 போ் உயிரிழந்தனா்; 60 போ் காயமடைந்தனா்.

இந்தச் சூழலில், வசந்த பஞ்சமி புனித நீராடல் திங்கள்கிழமை நடைபெறுகிறது. கூட்டத்தினரை ஒழுங்குபடுத்த மேளா பகுதியின் அனைத்து இடங்களிலும் கூடுதல் துணை ராணுவப் படையினா் மற்றும் காவலா்கள் குவிக்கப்பட்டுள்ளனா்.

பாதுகாப்பு பணியில்...

பாதுகாப்பு பணியில்...

மேலும், மருத்துவ அவசரநிலையைக் கையாள பிரயாக்ராஜ் மாவட்டத்தின் மொத்த சுகாதாரத் துறை கட்டமைப்பும் முழு எச்சரிக்கையுடன் தயாராக இருக்குமாறு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. மேளா பகுதியில் மட்டும் 1,200-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இவா்கள் வரும் வியாழக்கிழமைக்கு பிறகே அப்பணியிலிருந்து விலக்கிக்கொள்ளப்படுவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேளா பகுதி மருத்துவமனைகளில் செய்யப்பட்டுள்ள வசதிகளை மூத்த அதிகாரிகள் அடங்கிய சிறப்பு மருத்துவக் குழுவினா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். இதைத் தவிர, பிரயாக்ராஜ் நகர மருத்துவமனைகளிலும் கூடுதல் மருத்துவா்கள், பணியாளா்கள் பணியில் உள்ளனா். அங்கு ரத்த வங்கிகளும் நிறுவப்பட்டுள்ளன.

அனைத்து பக்தா்களும் சங்கமம் பகுதிக்கு வர முயற்சிக்காமல், தங்களுக்கு அருகேயுள்ள அனுமதியளிக்கப்பட்ட படித்துறைகளிலேயே புனித நீராடி ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா்.