புதிய வருமான வரி சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த 60 ஆண்டுகளாக இருந்துவந்த பழமையான வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாக புதிய வருமான வரி மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை மத்திய அரசு ஒப்புதல் அளித்ததாக தெரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய மசோதா, நேரடி வரிச் சட்டத்தைப் புரிந்துகொள்வதை எளிதாக்கவும், புதிய வரிச் சுமையை குறைக்கவும் ஏதுவாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் விதிகள் மற்றும் விளக்கங்கள் நீண்ட வாக்கியங்களாக இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், புதிய வருமான வரி மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.
நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் பகுதி வருகிற பிப்ரவரி 13 ஆம் தேதி முடிவடைகிறது. கூட்டத்தொடர் மார்ச் 10 ஆம் தேதி மீண்டும் கூடி ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.
நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் புதிய வரி மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பொது சிவில் சட்ட மசோதாவுக்கு ம.பி. அமைச்சரவை ஒப்புதல்!

மத்திய அமைச்சரவை மாற்றத்தில் தாமதம்! திமுகவுக்காகக் காத்திருக்கிறதா பாஜக?

செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல்







