பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மும்பையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 7 வங்கதேசத்தினர் கைது

மும்பையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 7 வங்கதேசத்தினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

News image

கைது

Updated On :7 பிப்ரவரி 2025, 1:20 pm

DIN

மும்பையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 7 வங்கதேசத்தினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாகக் கூறி நான்கு பெண்கள் உள்பட ஏழு வங்கதேசத்தினர் மும்பையில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சோஹாங் ஆஷிர் முல்லா (26), ஜாஹிதுல் இஸ்லாம் இமுல் (26), நோயம் அப்சல் ஹுசைன் ஷேக் (25), அலமின் ஷேக் (23), சுமா ஜாஹிகிர் ஆலம் துதுல் (24), தவ்மினா அக்தர் ராஜு (35), சல்மா மொக்சத் அலி (35) ஆகியோர் செம்பூரில் உள்ள மஹுலில் ஐந்து ஆண்டுகளாக தங்கியிருந்ததாக கூறியுள்ளனர்.

கைதான 7 பேரும் வங்கதேசத்தினர் என்றும் மார்ச் 2020 முதல் முறையான ஆவணங்கள் இன்றி வசிப்பதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் மீது வெளிநாட்டினர் சட்டம், பாஸ்போர்ட் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று காவல் அதிகாரி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.