ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!1984 கலவர வழக்கு காங். முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமார் காலமானார்!நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை! நீட் விலக்கு, ஒசூரிலிருந்து மெட்ரோ ரயில்! முதல்வர் விஜய் பேச்சுமனசாட்சியே இல்லாத நிறுவனம் என்.எல்.சி.! செளமியா அன்புமணி காட்டம்! நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்தின் ஆக்கிரமிப்புகளை இடித்த மத்திய அரசு!‘ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்’: முதல்வர் விஜய் புகழஞ்சலிதங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு! அமெரிக்காவில் விமானம் - காவல்துறை ஹெலிகாப்டர் மோதி விபத்து!அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்கியது!

திருவிழாவில் தலித் மக்களின் பங்களிப்பை நிராகரித்த கோவில் நிர்வாகம்!

குஜராத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் தலித் சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்ட சம்பவம் குறித்து...

கோப்புப் படம்

Published On :15 பிப்ரவரி 2025, 4:35 pm IST

குஜராத்தில் கோவில் திருவிழாவில் தலித் மக்கள் ஒதுக்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இதுகுறித்து விளக்கமளிக்குமாறு அதிகாரிகளுக்கு பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

குஜராத்தின் கல்யாண்புரா கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் பிப்ரவரி 8 முதல் 10 வரை பிராண பிரதிஷ்டை மஹோத்சவம் நடைபெற்றது. இந்தத் திருவிழாவில் தலித் சமூக மக்களின் பங்களிப்புகள் நிராகரிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

கடந்த ஜனவரி 16 அன்று காந்திநகரைச் சேர்ந்த இந்திரஜித் சிங் சோதா என்பவர் தலித் மக்களின் பங்களிப்பு நிராகரைக்கப்படுவதைக் கண்டறிந்தபோது இந்தப் பிரச்சினை முதலில் வெளிச்சத்திற்கு வந்தது. மேலும், ஹிந்து விழிப்புணர்வு அமைப்புகள் இந்தப் பிரச்னையைத் தீர்க்க முயற்சித்த போதிலும் அது சாத்தியமாகவில்லை.

ஜனவரி 25 அன்று இந்திரவதன் பரோட், சங்கர்பாய் படேல் ஆகியோர் கல்யாண்புரா கிராமத்திற்குச் சென்று கோயிலின் தலைமை நிர்வாகி பாலபாய் தயாவைச் சந்தித்து ​​இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சிகளைத் தொடங்கினர். அவர் கோயில் குழுவுடன் கலந்தாலோசிப்பதாக உறுதியளித்தார்.

இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை. பிப். 1 அன்று ஹிந்து அமைப்பு ஒன்றின் தலைவரான ரகுவீர் சிங் ஜடேஜா மற்றும் பட்டியல் சமூகத்தின் தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால், கோவில் நிர்வாகம் இதுகுறித்து பதிலளிக்கவில்லை.

மேலும், இந்தப் பிரச்னையைத் தீர்க்க எழுத்துப்பூர்வ தீர்மானம் கொண்டுவர ஹிந்து அமைப்புகள் முன்வந்த நிலையில் அங்குள்ள தாசில்தார் ஒப்புதல் தர மறுத்தார்.

திருவிழாவில் தலித் மக்கள் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்த நிலையில் அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

கடந்த பிப். 9 அன்று இந்த விவகாரம் குறித்து இந்திரவதன் பாரோட் என்பவர் குஜராத் முதல்வர் உள்பட பல அரசு அதிகாரிகளுக்கு கடிதம் எழுதிய நிலையில் இந்தப் பிரச்னையின் தீவிரம் அதிகமானது.

இதனைத் தொடர்ந்து, பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் பனஸ்கந்தா மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு இந்த விவகாரம் குறித்து 3 நாள்களுக்குள் உடனடியாக விளக்கமளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.