வைஷ்ணவி தேவி கோயிலில் குடியரசு துணைத் தலைவர் வழிபாடு!
ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தின் திரிகுடா மலைகளில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி ஆலயத்தில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் சனிக்கிழமை வழிபாடு மேற்கொண்டார்.
ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி பல்கலைக்கழகத்தின் 10வது பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராகத் தலைமை தாங்குவதற்காக ஒருநாள் பயணமாக ஜம்மு-காஷ்மீர் வந்துள்ளார்.
பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட பிறகு, துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவுடன் மதியம் குகைக் கோயிலுக்கு விமானத்தில் சென்று பிரார்த்தனை செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி ஆலய வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அன்ஷுல் கார்க் அவரை வரவேற்றார்.
வைஷ்ணவி தேவி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வசதி செய்வதற்கான பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கார்க் அவருக்கு விளக்கினார். வைஷ்ணவி தேவி கோயிலுக்கு அருகிலுள்ள பைரோன் கோயிலையும் அவர் பார்வையிட்டார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி பட்டமளிப்பு விழாவிற்காக தன்கர் கலந்துகொள்வதாகத் திட்டமிடப்பட்டிருந்தார், ஆனால் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவைத் தொடர்ந்து மத்திய அரசு அறிவித்த மாநில துக்கம் காரணமாக அவரது வருகை மாற்றியமைக்கப்பட்டது.
கத்ராவுக்குச் செல்வதற்கு முன்பு ஜம்மு விமான நிலையத்தில் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோரால் அவர் வரவேற்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.