3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

வாரணாசியில் ‘காசி தமிழ்ச் சங்கமம் 3.0’ நிகழ்ச்சி தொடங்கியது!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சி இன்று(சனிக்கிழமை) தொடங்கியது.

News image
Updated On :15 பிப்ரவரி 2025, 4:35 pm IST

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சி இன்று(சனிக்கிழமை) தொடங்கியது.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு பிரதமா் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட காசி தமிழ் சங்கமம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் தர்மேந்திரா பிரதான், எல். முருகன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

தமிழகத்தில் இருந்து சுமார் 2,400 பேர் பங்கேற்றுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 25 ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறவுள்ள இந்த தனித்துவம் வாய்ந்த கலாசார விழா, நாட்டின் மிகத் தொன்மையான இரண்டு ஆன்மிக வளம் கொண்ட பகுதிகளான காசியையும், தமிழ்நாட்டையும் ஒன்றிணைத்து, நிலப்பரப்பைக் கடந்து ஆழ்ந்த நாகரிகப் பிணைப்பை வளா்ப்பதாக மத்திய இணையமைச்சர் எல். முருகன் கூறியிருந்தார்.

காசி- தமிழ்நாடு இடையேயான ஒற்றுமை தேசத்தின் ஒற்றுமையாகும் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.