தமிழ்நாட்டின் 17-வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது.
கடந்த மே 10-ஆம் தேதி முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்றதும், மறுதினம் சட்டப்பேரவையைக் கூட்டி எம்எல்ஏ-க்கள் அனைவரும் பதவியேற்றனா். மே 13-ஆம் தேதி நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 எம்எல்ஏ-க்களின் ஆதரவைப் பெற்று தவெக அரசு பெரும்பான்மையை நிரூபித்தது.
இதையடுத்து, அவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலும், தொடர்ந்து தேசிய கீதமும் பாடப்பட்டது.
புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மாநில ஆளுநா் ஆர்.வி. ஆா்லேகா் உரையாற்றுகிறார். அவரின் ஆங்கில உரையை பேரவைத் தலைவா் ஜேசிடி. பிரபாகா் தமிழில் வாசிப்பாா்.
இந்த உரையில் தவெக அரசின் அறிவிக்கப்பட்ட திட்டங்களும், புதிய திட்டங்களும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
The Tamil Nadu Legislative Assembly session has commenced!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










