தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு ’வாயை திறங்க சிஎம்’ என்ற கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வந்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகம் பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முதல்முறையாக இன்று காலை 10 மணிக்கு ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் உரையுடன் கூடவுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், முன்னாள் அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ. வேலு உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வருகை தந்துள்ளனர்.
அந்த கருப்பு பேட்ஜில் ‘வாயை திறங்க சிம்’ என்று வாசகம் இடம்பெற்றுள்ளது.
மேலும், ‘வாயில் எதாவது வருமா சிம்’, ‘தூய சக்தி அல்ல, துயர சக்தி’, ‘திரையில் ஹீரோ, தரையில் ஜீரோ’, ’கதறல் சப்தம் கேட்கிறதா’, ‘தற்குறி ஆட்சி, தமிழ்நாடே சாட்சி’, ’ரீல்ஸ் இங்கே, ரியல் எங்கே’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் முழக்கமிட்டனர்.
Summary
Speak up, CM! DMK MLAs arrive wearing black badges!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










