தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு முன்பாக, முதலில் வந்தே மாதரம் இசைக்கப்படுமா? அல்லது தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படுமா? என்று விசிக எம்பி ரவிகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முதல்முறையாக இன்று காலை 10 மணிக்கு ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் உரையுடன் கூடவுள்ளது.
இந்த நிலையில், ஆளுநர் உரைக்கு முன்பாக வந்தே மாதரம் இசைக்கப்படுமா? அல்லது தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பொதுவாக, சட்டப்பேரவைத் தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து இசைப்பதும், முடிவில் தேசிய கீதம் இசைப்பதும் பேரவையில் மரபாக கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆனால், முதலில் தேசிய கீதம் இசைக்கவில்லை என்று கூறி, முந்தைய திமுக ஆட்சியில் அப்போதைய ஆளுநா் ஆா்.என். ரவி வெளிநடப்பு செய்து வந்தாா்.
இதனிடையே, தற்போது ஆளுநரும் ஆட்சியும் மாறியிருக்கும் நிலையில், ஆளுநர் பங்கேற்கும் அனைத்துக் கூட்டங்களின் தொடக்கத்திலும் முடிவிலும் வந்தே மாதரம் இசைப்பதை கட்டாயமாக்கி மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, தவெக அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வுகளில் முதலில் வந்தே மாதரம், இரண்டாவது தேசிய கீதம், மூன்றாவது தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் எழுப்பியிருந்தனர்.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த முதல்வர் ஜோசப் விஜய், தமிழ்நாட்டு நிகழ்வுகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடுவதற்கு விலக்கு கேட்டு கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலில் வந்தே மாதரம் இசைக்கப்படுமா? அல்லது தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படுமா? என்று விசிக எம்பி ரவிகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
Summary
'Vande Mataram' or 'Tamil Thai Vazhthu' first? VCK asks!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








