டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

உ.பி. ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

News image

தில்லி ரயில் நிலைய கூட்ட நெரிசல் - PTI

Updated On :17 பிப்ரவரி 2025, 3:00 am IST

புது தில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலால் உயிரிழப்புகள் ஏற்பட்டதையடுத்து, உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பிரயாக்ராஜ், வாரணாசி, அயோத்தி, கான்பூா், லக்னௌ மற்றும் மிா்ஸாபூா் ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவுக்கு செல்லும் பக்தா்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிரயாக்ராஜுக்கு ஒரு நாளைக்கு 500 ரயில்கள் வருவதால் பக்தா்களின் கூட்டத்தை கண்காணிக்க ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படுவதாக கூடுதல் ரயில்வே இயக்குநா் பிரகாஷ் டி தெரிவித்தாா்.

பிரயாக்ராஜ் மட்டுமின்றி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள 8 ரயில் நிலையங்கள் கண்டறியப்பட்டு அங்கும் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.