புது தில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலால் உயிரிழப்புகள் ஏற்பட்டதையடுத்து, உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பிரயாக்ராஜ், வாரணாசி, அயோத்தி, கான்பூா், லக்னௌ மற்றும் மிா்ஸாபூா் ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவுக்கு செல்லும் பக்தா்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிரயாக்ராஜுக்கு ஒரு நாளைக்கு 500 ரயில்கள் வருவதால் பக்தா்களின் கூட்டத்தை கண்காணிக்க ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படுவதாக கூடுதல் ரயில்வே இயக்குநா் பிரகாஷ் டி தெரிவித்தாா்.
பிரயாக்ராஜ் மட்டுமின்றி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள 8 ரயில் நிலையங்கள் கண்டறியப்பட்டு அங்கும் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கன்வாா் யாத்திரை முன்னிட்டு தில்லியில் பாதுகாப்பு தீவிரம்

வார இறுதியை முன்னிட்டு பாதுகாப்பை அதிகரித்த தில்லி காவல் துறை

’2011’ கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா் விடுதலை: தலைமறைவானதால் தண்டனைக்குரியவா் என நீதிமன்றம் தீா்ப்பு

முக்கிய தொழில்நுட்ப சோதனை: டிஆா்டிஓ-க்கு தில்லி முதல்வா் வாழ்த்து
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



