ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ரமலான் மாதம்: ஆந்திரத்திலும் முஸ்லிம்களுக்கு அலுவலக நேரம் குறைப்பு!

ஆந்திரத்திலும் முஸ்லிம்களுக்கு அலுவலக நேரம் குறைப்பு தொடர்பாக...

News image

ஆந்திரம் மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு.

கோப்புப்படம்

Updated On :18 பிப்ரவரி 2025, 2:32 pm

DIN

ரமலான் மாதத்தையொட்டி, அரசுத் துறைகளில் பணிபுரியும் அனைத்து முஸ்லிம்களுக்கும் அலுவலக நேரத்தை குறைத்து ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.

ரமலான் பண்டிகை இந்தாண்டு மார்ச் மாதம் 31-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. முன்னதாக, மார்ச் 2 முதல் 30 வரை இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து மாலையில் தொழுகை செய்வார்கள்.

இந்த நிலையில், ஆசிரியர்கள், ஒப்பந்த பணியாளர்கள், கிராம / வார்டு செயலாளர்கள் பணிபுரியும் அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் வரும் மார்ச் 2 முதல் மார்ச் 30 வரையிலான ரமலான் காலத்தில் அவர்கள் கடைப்பிடிக்கும் சடங்குகள் தொடர்பான வழிகாட்டுதலின் படி, தங்களது அலுவலக நேரம் முடிவுதற்கு 1 மணி நேரம் முன்னரே செல்லலாம் என்று ஆந்திர மாநில தெரிவித்துள்ளது.

ரமலான் மாதத்தில் நோன்பு முடித்து தொழுகை செய்வதற்கு ஏதுவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அரசுத் துறைகளில் பணிபுரியும் அனைத்து முஸ்லிம்களுக்கும் அலுவலக நேரத்தை குறைத்து மாலை 4 மணிக்கு வீட்டுக்குச் செல்ல அனுமதி வழங்கி தெலங்கானா அரசு உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.