அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

கல்பெட்டா குடும்பநல நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பற்றி..

News image

bomb threat

Updated On :20 பிப்ரவரி 2025, 4:55 pm IST

கல்பெட்டாவில் உள்ள குடும்ப நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் அங்கு சற்றுநேரம் பீதியை ஏற்படுத்தியது.

கடந்த சில நாள்களாகவே பள்ளி, விமான நிலையம் ஆகியவற்றுக்குத் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், கல்பெட்டா கும்பநல நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக, நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலில் வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

நீதிமன்ற ஊழியர்கள் மின்னஞ்சலைக் கண்டதும் உடனடியாக நீதிபதிக்குத் தகவல் தெரிவித்தனர், பின்னர் அவர் மூத்த காவல்துறை அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தார்.

பின்னர், சம்பவ இடத்துக்கு வெடிகுண்டுப் படையினர், மோப்ப நாய் படையினர் ஆய்வு செய்தனர். இருப்பினும், முழுமையான சோதனைக்குப் பிறகு எந்த வெடிபொருள்களும் கிடைக்கவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.