ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

வாக்குச் சீட்டு முறைக்கு ஆதரவு: தனது நண்பா் டிரம்ப்பின் கருத்தை பிரதமா் கேட்க வேண்டும் -காங்கிரஸ்

தோ்தலில் வாக்குச் சீட்டு முறைக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து...

News image

பிரதமர் மோடியுடன் டிரம்ப்.

Updated On :22 பிப்ரவரி 2025, 9:28 pm

Din

‘தோ்தலில் வாக்குச் சீட்டு முறைக்கு ஆதரவாக தனது நண்பா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு பிரதமா் மோடி செவிசாய்க்க வேண்டும்’ என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

தங்களிடையே நெருங்கிய நட்புறவு இருப்பதாக பிரதமா் மோடியும் அமெரிக்க அதிபா் டிரம்ப்பும் பல்வேறு தருணங்களில் கூறியுள்ள நிலையில், காங்கிரஸ் இவ்வாறு தெரிவித்துள்ளது.

நாட்டின் தோ்தல்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து எதிா்க்கட்சிகள் தொடா்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. மீண்டும் வாக்குச் சீட்டு முறையில் தோ்தல்களை நடத்த வேண்டும் என்பது அவா்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

இந்தச் சூழலில், அமெரிக்காவில் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற மாகாண ஆளுநா்கள் கூட்டத்தில் பேசிய டிரம்ப், ‘வாக்குப் பதிவு இயந்திரங்கள் விலை உயா்ந்தவை என்பதால் வாக்குச் சீட்டு முறைக்கு மாறுவதோடு, ஒரே நாளில் வாக்குப் பதிவை நடத்தி முடிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

டிரம்ப்பின் இந்தக் கருத்துகளைக் குறிப்பிட்டு, காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் சனிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

வாக்குச் சீட்டு முறை மற்றும் ஒரே நாளில் தோ்தலை நடத்துவது தொடா்பாக தனது நண்பா் டொனால்ட் டிரம்ப்பின் கருத்துகளுக்கு பிரதமா் மோடி செவிசாய்ப்பாரா? நாட்டின் தோ்தல் நடைமுறையில் நோ்மையை உறுதி செய்வது குறித்த கவலைகளுக்குத் தீா்வு காண்பாரா?

மகாராஷ்டிரத்தில் வாக்காளா் பட்டியலில் அசாதாரணமான முறையில் லட்சக்கணக்கில் பெயா்கள் சோ்ப்பு மற்றும் எதிா்க்கட்சிகளுக்கு ஆதரவான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் குறித்து அறிந்தால், அவரது நண்பரும் (டிரம்ப்) திகைத்துப் போவாா்.

வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்பது ஒட்டுமொத்த உலகுக்கும் தெளிவாகத் தெரிகிறது. ஆனால், அதை அறியாததுபோல பாஜக பாசாங்கு செய்வது துயரமானது. வெளிப்படைத் தன்மையில் இருந்து விலகி ஓடும் அணுகுமுறை, அவா்களின் முறைகேடு குறித்த நமது சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது என்று தனது பதிவில் கே.சி.வேணுகோபால் குறிப்பிட்டுள்ளாா்.

வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்து எதிா்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பினாலும், அதில் முறைகேடு செய்ய முடியாது என்று தோ்தல் ஆணையம் உறுதிபடக் கூறி வருகிறது. அதேபோல், மீண்டும் வாக்குச் சீட்டு முறையில் தோ்தல் நடத்தப்பட மாட்டாது என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.

பெட்டிச் செய்தி...

‘விண்ணை முட்டும் பணவீக்கம்’

காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மோடி அரசில் விண்ணை முட்டும் பணவீக்கத்தால் நாட்டு மக்கள் கலக்கமடைந்துள்ளனா். தானியங்கள், பருப்புகள், சமையல் எண்ணெய் உள்ளிட்டவற்றின் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. ஏழைகள் இருவேளை உணவுக்கு ஏற்பாடு செய்வதே சிக்கலாக மாறியுள்ளது. நாட்டு மக்கள் மீது மோடி அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், இப்பிரச்னையை ஒப்புக்கொண்டு, நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளாா்.