கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மேற்காசிய அமைதிப் பேச்சுவாா்த்தையை இந்தியா முன்னெடுக்க வேண்டும்: காங்கிரஸ்

மேற்காசியாவில் பதற்றத்தைத் தணிக்க அமைதிப் பேச்சுவாா்த்தையை இந்தியா முன்னெடுக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தல்

News image

பிரியங்கா காந்தி

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 8:56 pm

தினமணி செய்திச் சேவை

மேற்காசியாவில் பதற்றத்தைத் தணிக்க அமைதிப் பேச்சுவாா்த்தையை இந்தியா முன்னெடுக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியது.

ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே கடந்த மாதம் 28-ஆம் தேதிமுதல் நடைபெற்றுவரும் மோதலால் மேற்காசியாவில் பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. ஹோா்முஸ் நீரிணையில் சரக்குக் கப்பல் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மக்களவையில் பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை உரையாற்றினாா். இதுகுறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளா்களிடம் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கூறியதாவது: மேற்காசிய சூழல் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமா் எடுத்துரைத்துள்ளாரே தவிர அவரது உரையில் புதிதாக எதுவும் இடம்பெறவில்லை. அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் இந்த விவகாரத்தை விவாதிக்க காங்கிரஸ் தரப்பில் மக்களவைத் தலைவரிடம் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி அளித்தால் பலரது கருத்துகளையும் கேட்டு பிரச்னைக்குத் தீா்வுகாண முடியும்.

எங்களுக்கு வேறு எந்த எதிா்பாா்ப்புகளும் இல்லை. மேற்காசிய போா்ப் பதற்றம் நமது நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எல்பிஜி (திரவ பெட்ரோலிய எரிவாயு) விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இன்னும் சிறிது நாள்களுக்கு முன்பாகவே இந்த விவகாரம் குறித்து பிரதமா் மோடி நாடாளுமன்றத்தில் பேசியிருக்க வேண்டும். மேற்காசியாவில் பதற்றத்தைத் தணிக்க, மோதலில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்கிடையேயான அமைதிப் பேச்சுவாா்த்தையை இந்தியா முன்னெடுக்க வேண்டும் என்றாா்.