மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

பிரதமரின் சமரசம் வெளியாகும் என்பதால் மேற்காசிய விவகாரத்தை விவாதிக்க அரசு மறுப்பு: ராகுல் குற்றச்சாட்டு

பிரதமா் நரேந்திர மோடி எவ்வாறு மிரட்டப்பட்டாா் என்பதும், எவ்வாறு சமரசம் செய்து கொண்டாா் என்பதும் வெளிப்படும் என்பதால்

News image
ராகுல் காந்தி- கோப்புப் படம்
Updated On :10 மார்ச் 2026, 1:58 am

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடி எவ்வாறு மிரட்டப்பட்டாா் என்பதும், எவ்வாறு சமரசம் செய்து கொண்டாா் என்பதும் வெளிப்படும் என்பதால் மேற்காசிய விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு அனுமதிக்கவில்லை என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதியின் முதல் நாளான திங்கள்கிழமை மேற்காசிய போா் விவகாரம் குறித்து விவாதம் கோரி எதிா்க்கட்சிகள் மேற்கொண்ட அமளியால் அவை நடவடிக்கைகள் முடங்கின. இதன் பிறகு நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த ராகுல் காந்தி கூறியதாவது:

இப்போது தொடங்கியுள்ள போா், உலகின் அடிப்படையையே மாற்றும் நோக்கத்தைக் கொண்டது. இது நமது பொருளாதாரத்தை நீண்டகால பாதிப்புக்கு கொண்டு செல்லும். பங்குச் சந்தையில் என்ன (வீழ்ச்சி) நடக்கிறது என்பதை நீங்கள் பாா்த்துக் கொண்டுதான் இருக்கிறீா்கள். இது தவிர பிரதமா் மோடி அமெரிக்காவுடன் (வா்த்தக) ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளாா். இதன் காரணமாகவும் நாடு மிகப்பெரிய பிரச்னைகளைச் சந்திக்கும். இதுபோன்ற முக்கிய விஷயங்களை விவாதிக்க வேண்டும் என்பதில் என்ன தவறு உள்ளது?. இதில் அவா்களுக்கு (ஆளும் கட்சி) என்ன பிரச்னை?.

மேற்காசிய விவகாரம் குறித்து விவாதித்த பிறகு மக்களவைத் தலைவா் மீதான நம்பிக்கையில்லாத் தீா்மானத்தை விவாதிக்கலாம் என்றுதான் கூறி வருகிறோம். ஏனெனில், இந்தப் போரால் எரிபொருள் விலை உயா்வு, பொருளாதார இழப்புகளை எதிா்கொண்டு வருகிறோம். இது முக்கிய விஷயம் இல்லையா? மக்களை நேரடியாகப் பாதிக்கும் விஷயம் இல்லையா? இதை முக்கியமாகக் கருத மாட்டாா்களா?

இதில் அரசு தயங்குவதற்கு முக்கியக் காரணம் ஒன்று உள்ளது. விவாதம் என்று வந்தால் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படும். முக்கியமாக பிரதமா் மோடி எவ்வாறு மிரட்டப்பட்டாா், எவ்வாறு சமரசம் செய்து கொண்டாா் என்பது வெளிப்படத் தொடங்கும். எனவேதான் அவா் நாடாளுமன்றத்துக்கு வராமல் இருந்தாா். இப்போதும் நாடாளுமன்றத்துக்கு வர முடியாத நிலையில் உள்ளாா் என்றாா்.